கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஜனவரி மாதம் நாளை வழங்கப்படும் இன்றே மெசேஜ் வரும்.. Kalaignar Magalir Urimai Thogai 2024 January Today SMS Testing

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஜனவரி மாதம் நாளை வழங்கப்படும் இன்றே மெசேஜ் வரும்..

Kalaignar Magalir Urimai Thogai 2024 January Today SMS Testing

Kalaignar Magalir Urimai Thogai 2024 January Today SMS Testing கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ. 1000 ஆனது பொங்கலை முன்னிட்டு கூடுதலாக சேர்க்கப்பட்ட பயனாளிகளுக்கு இன்று மெசேஜ் அனுப்பப்படும் மெசேஜ் வந்த அனைவருக்கும் நாளை 10ஆம் தேதி பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Kalaignar Magalir Urimai Thogai 2024 January Today SMS Testing
Kalaignar Magalir Urimai Thogai 2024 January Today SMS Testing

எனவே ,அனைவருக்கும் இந்த தகவல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் யாருக்கெல்லாம் மெசேஜ் வருகிறது என்று கவனத்துடன் பாருங்கள் மெசேஜ் வருகின்ற அனைவருக்கும் நாளை அதாவது 10.01.2024 அன்று மகளிர் உரிமைத்தொகை வங்கியில் அனுப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது .அதேபோல் மேலும், ஜனவரி மாதம் மீண்டும் புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp    join
Telegram Join

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி மாதம் இதற்கான புதிய விண்ணப்பங்கள் அளிக்கப்படும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர்.

இதில் விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அதேபோல் ஜனவரி முதல் கூடுதலாக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அவை ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக மேலும்ம் சிலர் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனராம். தகுதியான நபர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களுக்கு அடுத்த மாதம் முதலே பணம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பணம் வழங்கும் தேதியான் 15ம் தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கூடுதல் தொகை;

மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். 1.13 கோடி பேருக்கு கடந்த மாதம் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. இந்த மாதம் முதல் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கலை மனதில் வைத்து நாளை 10ம் தேதி பணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று மெசேஜ் செய்து சோதனை செய்யப்படும். சோதனையாக ரூ. 1 அனுப்பப்படும். அதோடு இல்லாமல் பொங்கல் பரிசுத்தொகை 1000 ரூபாய் வேறு வழங்கப்பட உள்ளதால் அடுத்தடுத்து மக்களுக்கு பணமழை குவிய உள்ளது.

See also  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி 10th ,Degree படித்தவர்கள் IOB Bank Recruitment 2024 Assistant Job Notification Apply Online

Kalaignar Magalir Urimai Thogai 2024 January Today SMS Testing

திட்டத்தின் பின்னணி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-3-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது .

மகளிர் உரிமை திட்டம்:

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 24-7-2023 அன்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
Kalaignar Magalir Urimai Thogai 2024 January Today SMS Testing

தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15-9-2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000/- பெற்று பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ். முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து. மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த 10.11.2023 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Leave a Comment

error: Content is protected !!